நாவற்குழியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

Monday, October 16th, 2023

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: