நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!
Thursday, April 12th, 2018
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 13 , 14 ஆம் திகதிகளிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு 29, 30 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு அரசு கட்டாய அறிவித்தலை விடுத்துள்ளது.
மேலும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் குற்றங்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற இடங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு வேலைத் திட்டமொன்றை மதுவரித் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.
மேலும், முறை கேடாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய 011 204 5077 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011 287 7882 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மதுவரித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
லக்கலை காவல்நிலைய ஆயுத திருட்டு: மூன்று கட்டங்களாக விசாரணை ஆரம்பம்!
வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது!
600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக...
|
|
|


