வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது!
Wednesday, July 20th, 2016
சட்டவிரோதமாக துபாய்க்கு எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் 16 கோடி ரூபா பெறுமதியானவெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 69 என்ற விமானத்தில் செல்ல முற்பட்ட வேளை, பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்து குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் யூரோ, அமெரிக்க டொலர், குவைத் டினார், சவுதி அரேபிய ரியால், ஓமான் ரியால் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாகவும் இவற்றின் பெறுமதி 166 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவருடன் வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண்ணும், ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு - மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் - அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவு...
வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல் தொடர்பில் அமைச்சர் ரெஷான்ரணசிங்க தலையில்...
|
|
|


