நாட்டில் ஊழலை ஒழிக்க விஷேட வேலைத்திட்டம்!
Monday, March 14th, 2016நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பில் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கு தெளிவூட்டும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக, அண்மையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உயர் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளின் சில யோசனைகளை செயற்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் ஏனைய அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இது குறித்து தளிவுபடுத்தவுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் புதிய திருத்தச் சட்டமூலம்!
நாளை அவசரமாக கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை - பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பு!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
|
|