நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!.

Saturday, September 4th, 2021

தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2021 மே மாதம் 11 ஆம் திகதிமுதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது எனவும் குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


"மேட் இன் ஸ்ரீலங்கா" உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலிய...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க பாகிஸ்தானும் உதவிக் கரம் – ஜனாதிபதியிடம...
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...