நாடு பூராகவும் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படும் – சுகாதார அமைச்சு!
Wednesday, December 14th, 2016நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதன் அபிவிருத்திக்கு தேவையான 20 கோடி ரூபா உபகரணங்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையுடன் இணைந்ததாக சகல வசதிகளையும் கொண்ட பல் வைத்தியசாலையொன்று விரைவில் அமைக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை சகல மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய 130 கோடி ரூபா முதல் கட்டமாக ஒதுக்கப்பட இருப்பதாகவும். 150 கோடி ரூபா இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கென வழங்கப்பட இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Related posts:
ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...
|
|