நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்யக் கோரிக்கை !
Friday, March 10th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியை வதிவிடமாகக் கொண்டவர்கள் தமது வளர்ப்பு நாய்களை இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர், கொக்குவில் உப அலுவலகங்களில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவு செய்யுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தக் காலப் பகுதிக்குள் பதிவு செய்யப்படாத வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related posts:
கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை : புதிய சட்டத்தை கொண்டு வர அரசு முயற்சி!
தந்தைக்கு அச்சப்பட்டு மரத்தில் ஏறி ஒழிந்திருந்த சிறுவன் தவறி விழுந்து காயம்
குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!
|
|