நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி !

Friday, June 10th, 2016

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணை தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று 2.30 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை  தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் 6 மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 6.30  மணியளவில் பிரேரணைத் தொடர்பான முடிவுகள் வெளியடப்பட்டன.

பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்க் கட்சியினர்  கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.    குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. யின் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த பிரேரணைத் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை - அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் ...