நந்திக்கடல் கடலுடன் வெட்டி இணைப்பு

Monday, November 13th, 2017

அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்து வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதால் நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

முல்லை மாவட்ட அரசாங்க அதிபருடன் முகத்துவார பகுதியை கடலுடன் வெட்டி இணைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது .இதற்கு அமைவாக குறித்த முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த பிரதேசத்தின் வயலநிலங்களில் புகும் நீரை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: