நடுவீதியில் ரயர்களை கொழுத்திய இளைஞர் கைது!
 Wednesday, September 21st, 2016
        
                    Wednesday, September 21st, 2016
            
யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் ரயர் கொழுத்திய இளைஞர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.உடையார் கட்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் இன்று அதிகாலை பழைய ரயரினை போட்டு எரித்துள்ளார்.சம்பவத்தினை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், நாளை மறுதினம் 24 ஆம் திகதி சிங்கள குடியேற்றம் மற்றும் காணி சுவீகரிப்பிற்கு எதிராக யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளது.

Related posts:
இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை –  தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!
மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவ...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனட...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        