தேன் எடுக்க சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

Monday, March 19th, 2018

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் வேறு இருவருடன் தேனை எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற போது குட்டிகளுடன் இருந்த கரடியால் அவர் தாக்குதலுக்குஉள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் ஏனைய இருவரும் தமது உறவினர்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளனர். உறவினர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பொலிஸாரால் அவர்கள் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபரின் பாதத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாககுறிப்பிட்டுள்ளது.

Related posts: