தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !

Friday, December 23rd, 2016

தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது  திடீரென மயங்கி விழுந்த 78 வயதான முதியவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை(22) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மருதடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று மதியம் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
dead1-720x480-720x480 (1)

Related posts: