தென்கொரியாவிற்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொழில் வாய்ப்பிற்காக தென்கொரியாவிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தென்கொரிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கொரியாவில் தற்சமயம் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான மேலதிக வசதிகள் பல செய்து கொடுப்பதற்கு தென்கொரிய வெளிநாட்டமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். தற்சமயம் 42,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் பணிபுரிவதாகவும் வெளிநாட்டமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
Related posts:
அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு தடை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பு...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம்...
|
|