தூங்குவது போல விளையாட்டு காட்டிய ஆசிரியரின் உயிர் பிரிந்தது!
Thursday, January 3rd, 2019பிள்ளைகளிற்கு தூங்குவது போல விளையாட்டு காட்ட முயன்ற ஆசிரியர் ஒருவர் கயிறு தவறுதலாக இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பளையில் நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் இடம்பெற்றது.
பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஸ்ணன் கோபாலகிருஸ்ணன் (வயது-37) என்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.
புதுவருட தினமான நேற்று முன்தினம் இரவு பிள்ளைகளிற்கு தூங்குவது போன்று விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது கழுத்தில் கயிறு தவறுதலாக இறுகியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து - பரீட்சைகள் திணைக்கள...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|