துப்பாக்கிப் பிரயோகத்துக்கு அனுமதி பெற வேண்டும் – கடற்படை தளபதி!
Monday, March 13th, 2017கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைப் பிரிவிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான எந்த அனுமதியும் கோரப்பட வில்லை. இது இவ்வாறிருக்கையில் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கூறுவது ஆதாரமற்ற ஒன்றாகும் எனவும் தளபதி மேலும் கூறினார். இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
நாடா புயலில் சிக்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!
தென்னைச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கல்!
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...
|
|