திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் பாதயாத்திரை!

Saturday, December 18th, 2021

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை சைவ மகா சபை பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா சூழ்நிலையை கருத்திற்க்கொண்டு மட்டுப்படுத்ப்பட்ட சிவனடியார்களை மட்டும் உள்ளடக்கியவாறு இம்முறை சுகாதார வழிகாட்டுதல்களுடன் இடம்பெற்றது.

இன்று காலை 5 மணியளவில்  யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை சம்புநாத  ஈஸ்வரத்தில் ஆரம்பமாகி சிவனுடைய நாணயங்களையும் தேவார பதிகங்களையும் உச்சரித்தவாறு  பனிப்புலம், சுழிபுரம் பகுதிகளிலுள்ள ஆலயங்களை தரிசித்த வண்ணம் பொன்னாலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இராவணேஸ்வரம் தலத்தில் நிறைவடைந்து.

மேலும் இந்த பாதயாத்திரையின் போது சுழிபுரம் மேற்கு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயத்தில் அகில இலங்கை சைவ மகாசபையால் அச்சிடப்பட்ட நாள் காட்டி வெளியீடும் அதனைத்தொடர்ந்து பிடியரிசித்திட்டமும்  அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பாக அறநெறி மாணவர்களிடம் பொதிப்பை ஒன்று வழங்கப்பட்டு அவர்களின் இல்லங்களில் உணவுத்தயாரிப்பின் போது ஒரு பிடி அரிசியை இட்டு அதனை நிரப்பி எதிர்வரும் தைப்பூசதினத்தில் அவை சேகரிக்கப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டது .

000

Related posts:


உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் –...
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!