திருநெல்வேலி கிழக்கு,மேற்கு வீதிகளை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துத் தருமாறு ஈ.பி.டி.பியினரிடம் கோரிக்கை!
Thursday, June 16th, 2016திருநெல்வேலி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி வீதிகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் அவற்றை புனரமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது பகுதி வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பாகவும் தமது அடிப்படைத் தேவைகள் வாழ்வாதார உதவிகள் மற்றும் பிரச்சினைகள் தொர்பாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் மக்கள் முன்வைத்திருந்தனர்.
குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அம்பலம் ரவீந்திரதாசன் இவ்விடயத்தை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
வர்த்தகர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பாரிய சலுகைகள் வழங்கப்பட்டள்ளன - அமைச்சர் மஹிந்த அமர...
வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எ...
|
|