திருகோணமலையில் கடுமையான வறட்சி 400 குடும்பங்கள் பாதிப்பு!
Thursday, December 29th, 2016
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக 440 குடும்பங்களில் உள்ள 1,381பேர் பாதிக்கப்ப்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துநகர் பகுதியில் 200 குடும்பங்களும், மங்கையோது பகுதியில் 225 குடும்பங்களும் மற்றும் வெலிகம பகுதியில் 15 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts:
பழவகைகளின் விலைகள் அதிகரிப்பு!
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் - வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவ...
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கம் ஆதரவு - நிதி இராஜாங்க ஷெஹான் சேம...
|
|
|


