திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!
Saturday, May 15th, 2021மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.
எனினும் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்து காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
இன்று (15) காலை 7.30 மணி அளவில் மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த போது கீழ் பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா மரணங்கள் – மொத்த உயிரிழப்பு 73 ஆக உயர்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்...
பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
|
|