தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Sunday, October 24th, 2021பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐந்து இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு தருவிக்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமற்ற உரத்தையோ கிருமி நாசினியையோ விவசாயிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும். விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தடுக்கப்படும் - மஹிந்த அமரவீர!
எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை - நிதி அமைச்சு!
இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!
|
|