தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021

பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்து இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு தருவிக்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரமற்ற உரத்தையோ கிருமி நாசினியையோ விவசாயிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும். விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உர இறக்குமதிக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி - அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜானக வக...
வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு - அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!