திடீரென இலங்கை வந்துள்ளது பேஸ்புக் குழு!

Friday, May 11th, 2018

பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றசாட்டு தொடர்பில்விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு  இலங்கை வந்துள்ளது.

இந்தியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலக பிரதிநிதிகளே இவ்வாறு வருகைதந்துள்ளனர். இவர்கள் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் குழந்தைகள், பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்துள்ளனர். அத்துடன் நாட்டில் தொழில் முனைவோர்களுக்காக விசேடகருத்தரங்கு ஒன்றையும் நடத்தவுள்ளனர்.

Related posts:

தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்...
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் - சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்க...