தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Tuesday, November 15th, 2016

புதையலுக்காக தந்தையால் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளது பூதவுடல்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மாங்காயூற்று கிளிக்குஞ்சுமலையில் அமைந்துள்ள அன்னார்களது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா மூவரது பூதவுடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு அன்னார்களது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

கன்­னியா  காட்­டுப்­ப­கு­தியில்  இருப்பதாக கூறப்பட்ட புதையலை  பெற்­றுக்­கொள்­வ­தாற்­காக கிளிக்குஞ்சு மலை பிர­தே­சத்தில் தனது மனைவியையும் இரு பிள்­ளை­க­ளையும்  தந்தையான ராஜ­லஷ்மன்  வெட்டிப்படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-d34dde9e08b9616cfb125da8802358f2338688d9e97cef10796e0ede17a2ee93-V

image-0-02-06-98238bbae7dd61f2fe029046bd542094dd4a99d48f8f9d1e8dfacefadea8d8b4-V

Related posts: