தங்கத்துடன் யாழ்ப்பாணத்து பெண்கள் கைது!

Tuesday, May 8th, 2018

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரின் பயண பைகளில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராமிற்கும் அதிகளவான தங்கத்தினை விமான நிலைய சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் என விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: