டெங்கு பரவக்கூடிய சூழல்: மூவருக்கு அபராதம் விதிப்பு!
Friday, December 16th, 2016
டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த காணி உரிமையாளர்கள் மூவருக்கு 25ஆயிரம் ரூபா அபராதம் விதித்த மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் குறித்த காணி உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் காணிகளை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு அதிகமாக பரவி இருந்ததால் காணி உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் சுன்னாகம் நகரப் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய வகையில் இளநீர் கோம்பைகள் மற்றும் ஜஸ்கிறீம் கிண்ணங்களை வீசி வைத்த வீட்டு உரிமையாளருக்கு 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக அரசாங்கம் பயன்படுத்தா...
பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவு!
வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!
|
|
|


