டெங்கு தாக்கம் அதிகரிப்பு:  96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு!

Saturday, March 18th, 2017

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் யாழ்.பொலிஸாரால் 390 வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 96 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மார்ச் மாதம் வரை மழை இல்லை: மூன்று மாதங்களுக்கே குடிநீரை விநியோகிக்க முடியும் - நீர் வழங்கல் வடிகாலம...
அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப்பொருள்! வவுனியாவிலுள்ள தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில்!
ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க ஏற்பாடு - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப...