யாழ்ப்பாணத்தை உலுக்கும் வாள்வெட்டுக் கும்பல்: இதுவரை 81 பேர் கைது 75 பேருக்குப் பிணை!
Wednesday, November 22nd, 2017
வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாள்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7 மோட்டார்சைக்கிள்கள் பொலிஸ்நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பொலிஸ்குழு அமைக்கப்பட்டது. தினமும் மாலை நேரங்களிலிருந்து நள்ளிரவு வரை இந்தச் சுற்றிவளைப்பும் தேடுதலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீருக்கான கட்டண உயர்வு இடைநிறுத்ப்பட்டது!
கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞருக்குப் பிணை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்களுடன் நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்...
|
|