பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறெனில் பொதுப்போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவர முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், அதேநேரம், சகல அரச சேவையாளர்களும், வழமைபோல் பணிகளுக்கு திரும்பவுள்ளதால், நெரிசல் நிலையை குறைப்பதற்கு பொதுப்போக்குவரத்தை வழமை போல இயங்க செய்ய வேண்டிய தேவையுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சுகாதார நடைமுறைகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: