டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Thursday, January 18th, 2024

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது முன்னெடுக்கப்படுகிறது.

கொக்குவில் பகுதியில்  உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விஜயம் மேற்கொண்டதோடு வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதோடு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டது.

000

Related posts:

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு - வைத்தியர் அதி...
2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவத வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் - பிரதி ப...