டிப்ளோமா பட்டதாரிகள்  நியமனங்கள் தொடர்பான மாற்றத்திற்கு தொடர்பு கொள்ளவும் – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்!

Monday, October 17th, 2016

நியமனம் பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகள் தாம் சார்ந்த மாகாணத்துக்கோ அல்லது மாவட்டத்திற்கோ நியமனங்களை மாற்றிக் கொள்ளும் பொருட்டு மேன்முறையீடு செய்வதற்கமைய அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேவை கருதிய பட்டதாரிகள் நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

டிப்ளோமா பட்டதாரிகள் 3225 பேருக்கான நியமனங்கள் கடந்த 4 ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டிருந்தனர். இந்த நியமனம் கிடைக்கப் பெற்றோர் தமது மாகாணத்தை அல்லது மாவடத்தை அல்லாதவர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவித்த மேற்படி பட்டதாரிகள் தமது மாகாணங்களுக்கு அல்லது மாவட்டத்திற்கு நியமனங்களை மாற்றித் தருமாறு கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அடிப்படையில் இன்றும் நாளையும் அந்தந்த மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளருடனோ அல்லது அமைச்சின் கல்வியியற் கல்லூரி ஆணையாளரையோ சந்தித்து அல்லது தொடர்பு கொண்டு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அத்துடன் 011 2784819 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதனூடாக அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

01(7)

Related posts: