ஜனவரியில் மட்டும் தென்மராட்சியில் 84 பேருக்கு டெங்கு!

Saturday, February 4th, 2017

தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த மாதம் 84பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 77பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகினர். பிரதேசத்தில் பெய்த மழையால் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது. டெங்குத் தொற்றுள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தமது குடியிருப்புகள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை அழித்து டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1416383666mosquito_0

Related posts: