பூட்டிய அறையில் யுவதியின் சடலம்!
Friday, October 7th, 2016
வல்வெட்டித்துறை மாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பூட்டிய அறையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெற்றிவேல் நிரோஜினி (வயது – 25) என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வல்வெட்டித்துறை பொலிஸார் சடலத்தினை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பில் நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related posts:
இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர் நாணய பண்டமாற்றாக பெற்றது இலங்கை
அமைச்சரவையை உடனடியாக மீளமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...
|
|