ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி !
Tuesday, April 4th, 2017
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக வரும் புதன்கிழமை (05) நீதியமைச்சில் வைத்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நூறுபேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்குப் பயனுள்ள சேவைகளை ஆற்றும் வகையில் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறான சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்!
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...
|
|
|


