நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Monday, July 11th, 2016

வடபகுதி மீனவர்கள் நாளை காலை 8.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் இரு நாட்கள் மீன்பிடித் தொழிலை செய்வதற்கான கோரிக்கையினை நிராகரிக்க வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியினை இரத்துச்செய்ய வலியுறுத்தி அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும்,  தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடபகுதி மீனவர்கள் அனைவரும் நாளை தமது தொழினை புறக்கணித்தும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொழிலினை கண்டித்தும், குறித்த போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: