சுன்னாகம் சந்தையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 700 கிலோ மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிப்பு!

Tuesday, September 26th, 2023

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோகிராம் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த தொகை மீன்கள் நேற்றையதினம் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அழுகிய மற்றும் நச்சு இரசாயனம் கலந்த மீன்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகாரிகளினால் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், குறித்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் - பொருளாதார மறுமலர்ச்சி மற்ற...
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் மற்றும் விற்பனைக்கான ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்...