தத்துக் கொடுக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை அறியும் வேலைத்திட்டம் அரம்பம் !
Saturday, November 25th, 2017
ஐரோப்பிய நாடுகளுக்கு பல வருடங்களுக்கு முன்னர் தத்துக் கொடுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிறார்களின் உண்மையான பெற்றோரை கண்டறியும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர், இதுதொடர்பில் நெதர்லாந்தின் தொலைகாட்சி ஒன்றுக்கு தகவல் வழங்கி இருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 4 ஆயிரம் சிறார்கள் வரையில் இலங்கையில் இருந்து நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களின் உண்மையான பெற்றோரை அறிந்துக் கொள்ள வேண்டியத் தேவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெதர்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Related posts:
கோப் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!
சிறார்கள் கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் சாதிப்பவர்களாகத் திகழவேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் ப...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்...
|
|