சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்தாகும்?

Monday, August 28th, 2017

கட்சியின் யாப்பை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைவாக அடுத்த வாரம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் 7 நாடாளுடன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டால் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு அமைய இரத்து செய்யப்படும்.பிரசன்ன ரணதுங்க, சனத் நிஷாந்த பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்தன, திலும் அமுனுகம, லோஹான் ரத்வத்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரே இவ்வாறு கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related posts: