சீரற்ற வானிலை – 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Monday, December 26th, 2022

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் - சிறைச்சாலைகள் திணைக...
காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகள...
பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டு - கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கை...