காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023

நீதிமன்றத்தால் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்படும் கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலப்பிட்டிய, எல்பிட்டி, உடுகம மற்றும் பத்தேகம ஆகிய நீதிமன்றங்களினால் அனுப்பப்படும் கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில கைதிகளுக்கு பரவியுள்ள காய்ச்சல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காய்ச்சல் காரணமாக அந்த சிறைச்சாலைக்கு செல்ல இரண்டு வார காலம் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக நீதிமன்றத்தால் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்படும் கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: