சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் கண்டனஆர்ப்பாட்டங்கள்!

Wednesday, June 7th, 2017

திருகோணமலை மூதூர் பெருவெளிக் கிராமத்தில் மூன்றுசிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்துமுல்லைத்தீவுமற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில் யதினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு முன்பாக ஒன்று கூடியமாணவர்கள் மூன்றுசிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குஉள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டனக் குரல்களைஎழுப்பிதமதுஎதிர்ப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையேமட்டக்களப்புமாவட்டத்தின் சிலபாடசாலைகளிலும் குறித்தசம்பவத்தைக் கண்டித்து பாடசாலைகளைச் சேர்ந்தமாணவர்களும்,பெற்றோர்களும் இணைந்துகண்டனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும் அதேவேளை, எதிர்காலத்திலும் இவ்வாறானசம்பவங்கள் நிகழாதவகையில் உறுதிசெய்யப்படவேண்டுமென்றும் போராட்டத்தில் பங்கெடுத்தோர் வலியுறுத்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: