சித்தன்கேணி வீதி விபத்தில் குடும்பஸ்தர் கை,கால் முறிவு!

Wednesday, October 19th, 2016

சித்தன்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் கை,கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் பண்ணாகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு நிதியரசன் (வயது-50) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே விபத்துக்குள்ளானவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் சித்தன்கNணி சந்தியில் இருந்து சங்கானை நோக்கிச் செல்லும் வீதியில் மதுபோதையில் நின்ற இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென இவர்களில் ஒருவர் மற்றையவரைத் தாக்க வீதியைக் கடந்தபோது வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி குடும்பஸ்தர் அவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். இதனால் கை, கால் முறிந்த நிலையில் விழுந்து கிடந்த அவரை நபர் ஒருவர் காப்பாற்றி முதலுதவி அளித்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

accidnet-720x480

Related posts: