சிகிரியா சுவர் ஓவியங்களின் நிலை தொடர்பில் ஆராய விசேட குழு!
Sunday, July 31st, 2016உலகபுகழ் பெற்ற சிகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக. தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு அவற்றிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் இந்த குழுவினரால் ஆராயப்படவுள்ளது. இதனை அடுத்து ஓவியங்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள் தொடர்பில் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தொல்பொருளியல் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
சாவகச்சேரி வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!
க.பொ.த பரீட்சை மோசடி - மூவர் கைது!
முடக்க நிலை நீக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் - இராணுவ தள...
|
|