இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் இதில் 115 ஆண்களும் 101 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 30 வயதுக்கு குறைவான 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 36 ஆயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 992 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 55 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டின் புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்துக் கணிப்பின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவ...
சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் - சுகாதார அமைச்சு அறிவ...