சாவகச்சேரியில் கொள்ளைச் சம்பவம் – தம்பதியினர் படுகாயம்!
Friday, April 10th, 2020நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சாவகச்சேரி – மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன், மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16000 ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியினர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் காரைநகரில் போராட்டம்!
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படு...
|
|