சாலை விபத்தில் இருவர் பலி: 9 பேர் படுகாயம்!
Friday, August 26th, 2016
இன்று அதிகாலை (26) இடம்பெற்ற சிலாபம் – புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்த இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் எனவும், அதே காரில் பயணித்த மேலும் இருவர் மற்றும் வானில் பயணித்த 7 பேருமே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவந்துள்ளது
Related posts:
எங்களின் வாழ்வியல் அம்சங்களில் குடித்தொகைப் பரம்பல் என்பது குறைந்து வருகிறது: புவியியல் துறை பேராசிர...
அழுத்தங்கள் வந்தாலும் அபிவிருத்தி நிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் சாகல ரத்நாயக்க!
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் - பதில் ஜனாத...
|
|
தொழிற் சங்க நடவடிக்கைக்கு மத்தியில் வழக்கமான செயற்பாடுகள் முன்னெடுப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவ...
நாடாளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது - ஜனாதிபத...
11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!