சாரதி மற்றும் நடாத்துனர் மீது தாக்குதல் : 7 பேர் கைது!
Tuesday, August 16th, 2016கம்பளை,கெலிஓயாப் பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்றின் சாரதியையும் நடாத்துனரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏழுஇளைஞர்கள் கைதாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட இருவரும் கடுங்காயமுற்று அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து ஒன்றை தனியார் கெப்வண்டி ஒன்று முந்திச் செல்ல எத்தனித்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் அது தாக்குதலாகமாறியுள்ளது. கெப் வண்டியில் சென்ற இளைஞர்கள் பஸ்வண்டியை முந்திச் செல்ல முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் போது கெப் வாகனத்தில் இருந்த ஏழு இளைஞர்களும் சேர்ந்து பேருந்து சாரதியையும் நடாத்துனரையும் தாக்கி உள்ளனர்.
இதனால் காயமடைந்த இருவரும் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் இவர்களைத் தாக்கிய இளைஞர்கள் ஒரு சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வைத்தியபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர்கண்டி நீதவன் முன் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கைதான இளைஞர்கள் குண்டசாலை மற்றும் பிலவல பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். இவர்கள் அனைவரும் 23 முதல் 28 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனப் பொலிஸார்தெரிவித்தனர்.
Related posts:
|
|