சதுப்பு நில ஆக்கிரமிப்பே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் – சமூக ஆர்வலர்கள் !
Friday, May 20th, 2016
கொழும்பைச் சுற்றி இருந்த சதுப்புநிலப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டமையே கொழும்பில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வெல்லம்பிட்டி, கொலன்னாவை, கோட்டே, இராஜகிரிய, அம்பதலே ஆகிய பிரதேசங்களில் தற்போதைக்கு மூன்று வீத சதுப்பு நிலங்களே எஞ்சியுள்ளன.
ஏனைய சதுப்பு நிலங்கள் அரசாங்கத்தின் தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களுக்கும், ஏனைய நிர்மாணப் பணிகளுக்கும் என நிரப்பப்பட்டுள்ளது.
சில இடங்களில் சதுப்புநிலங்கள் மண்நிரப்பப்பட்டு தனியார் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக பேரைவாவியுடன் தொடர்புபட்டிருந்த நீரோட்ட வழிப்பாதைகள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன. மேலதிக நீர் வழிந்தோடும் வழிகளும் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே கொழும்பில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
வீட்டுத் திட்டம் குறித்து - ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்!
இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி இலங்கையில்!
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - யாழ்.மாவட்டச் செயலர்...
|
|
|


