சட்டவிரோத மின்சாரம் பெற்ற 7 பேர் கைது
Tuesday, March 15th, 2016அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்மானிக்குள் கம்பியை வைத்து மின்மானியின் வாசிப்பை குறைத்துக்காட்டிய குற்றச்சாட்டில் இருவரும் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவரும் நேற்று திங்கட்கிழமை (14) காலையில் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற 4 பேர் கடந்த ஞாயிரன்று(13) இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கொழும்பு, இலங்கை மின்சார சபையிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
மூன்றாவது கட்டம் நடைமுறையில் தெரிவு செய்த ஆயிரம் பேருக்கு தற்போது சிமெந்து விநியோகம்!
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது - தொற்று நோயியல...
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|