சங்குவேலி குடம்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

Wednesday, August 24th, 2016

சங்குவேலி பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும்,மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கடந்த வாரம் சங்குவேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொலை சம்பவத்தை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா சன்னாபிரகாஸ் அடங்கிய ஜவர் கொண்ட குழுவே மேற்கொண்டதாக கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக விஷேட பொலிஸ் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் கொலை மேற்கொண்ட ஜவர் கொண்ட குழுவின் அங்கத்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்திருந்தோம். அவரை மல்லாகம் நீதிமன்றில்அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியுள்ளோம். மேலும் இக் கொலையினை மேற்கொண்ட எனையோரையும் கைது செய்வதற்கான விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றினூடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

Related posts: