கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Tuesday, January 18th, 2022

இலங்கையில் கடந்த நாள்களை விட ஒட்சிசன் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கொரோனா தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் படுக்கைகளில் உள்ளன.

கடந்த நாள்களை விட தற்போது கொரோனா தொற்றாகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் 100 க்கு 30 சதவீதமான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் 70 தீவிர சிகிச்சை படுக்கைகளில் 52 படுக்கைகளில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாகத் தெரியவந்துள்ளது.

இதேநேரம் ஒட்சிசன் தேவையுடைய சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெற்றிகரமான கொரோனா தடுப்பூசி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட்டால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: