“கொரோனா ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை”- சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அறிக்கை கையளிப்பு!

Friday, April 17th, 2020

“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” என்ற பெயரில் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தல், நாட்டின் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பான தமது யோசனை அடங்கிய அறிக்கை ஒன்றையே ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக சங்கத்தின் ஊடக இணைப்பாளர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அறிக்கையில்“மூன்று கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினால் எப்படி வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் வருவதற்கு மட்டுப்படுத்த முடியும்,? அனுமதி பத்திரம் வழங்க முடியுமா? குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்தல் போன்றவை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனியார் வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். பொது போக்குவரத்து வசதிகள் தளர்த்தப்படாது. இரண்டாவது சந்தர்ப்பத்திலேயே பொது போக்குவரத்தினை மட்டுப்படுத்தி தளர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிலையங்கள், உணவு வழங்கும் இடங்களை முன்பு போலவே நடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தூர இடைவெளியில் சேவை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை சற்று தாமதமாகவே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவை ஆரம்பிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளதுடன் தொழிற்சாலைகள் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவற்றை 50 சதவீத திறனில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: